Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 28 December 2013

சொல்லாதீர்கள்... கவிதை?



எங்களை இல்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் குறையாத வறுமையை
 வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...!


எங்களை இயலாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
அடுத்தவருக்கு தெரியாமல்
 தனித்து அழமுடியும் எங்களால்..!


எங்களை வீரமற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
பசியை எதிர்த்து போராடும்
 தைரியம் இருக்கிறது எங்களிடம்..!


எங்களை திக்கற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்....
எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது
 எங்கள் வறுமை ஜாதிதான்..!


எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்
 குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு...

0 comments:

Post a Comment