Pages

Subscribe:

Ads 468x60px

Saturday, 7 December 2013

காசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முடியுமா?




"தற்போது அனைத்து வங்கியின் காசோலை ஒரே அளவில் உள்ளது. எனவே காசோலையில் தேதி, பெயர், தொகை - எண்ணால் மற்றும் எழுத்தால் உரிய இடத்தில் வீட்டில் உள்ள பிரிண்டரில் டைப் செய்ய வழி முறை உள்ளதா?"

 என்று கேட்டிருந்தார்.


 நான் வோர்டில் இந்த செட்டிங்சை செய்து வைத்திருந்தேன்.


ஆனால் அதைவிட எளிதாக காசோலை கணக்குகளை எளிதில் கையாளும் வண்ணம் எக்செல்லில் ஒரு இலவச டெம்ப்ளேட் கிடைத்தது.


அதன் மூலம் நம் வீட்டில் கூட பிரிண்டரில் காசோலையில் பெயர் தேதி தொகைகளை எளிதாக நிரப்ப  செய்ய முடியும்.


   கையாள்வதற்கு  மிக எளிமையான இதை  பயன்படுத்த Excel மேக்ரோ Enable  செய்யப்பட்டிருக்க வேண்டும்

இதோ  விளக்கம்


கீழுள்ள இணைப்பின்மூலம் Cheque Print என்ற எக்செல் கோப்பை டவுன் லோட் செய்யவும்.


Cheque Print  DOWNLOAD

மனிதனை பற்றிய சில உண்மைகள்! ! ! !



 * இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

கிரெடிட் கார்டும்.. கஸ்டமர் கேரும்.?



கிரெடிட் கார்டு புழக்கம் அதிகமாக இருக்கற காலம் இது.. பெரும்பாலும் ஐ.டி துறையினர்தான் கிரெடிட் கார்டுக்கு அடிமையாய் இருக்காங்க.. ஒருமுறை கிரெடிட்கார்டை யூஸ் பண்ணிப் பழக்கப்படுத்திட்டோம்னா.. எந்தக் கடைக்குப் போனோம்னாலும் சரி.. நமக்கு எவ்வளவு சம்பளம்.. எவ்வளவுக்கு சாப்பிட வைச்சிருக்கோம் எதுவும் நினைப்பு இருக்காது.. எடுத்து சரக்.. முடிஞ்சது.. அடுத்து பில் வந்ததுக்குப் அப்புறம்தான் மண்டையில ஏறும்.. இதுக்கெல்லாம் பணம் கட்டனுமான்னு..

பொருட்கள் வாங்கினது என்னமோ நாமதான்.. வாங்கின பொருளை யூஸ் பண்ண மட்டும் நல்லா இருக்கும்... பணம் கட்டதாங்க அவ்ளோ கஷ்டமாயிருக்கு.. :-)

பில் வந்துடுச்சா.. நமக்கு என்னதான் வேற பிரச்சினை இருந்தாலும் சரி.. வேற தலை போற கமிட்மெண்ட் இருந்தாலும் சரி.. கார்டுக்குப் பில் கட்டிட்டா தப்பிச்சோம்.. இல்ல அடுத்த பில்லிங்ல கிரெடிட் லிமிட்டை விட ரெண்டு மடங்கு பில் வரும்..

நம்முடைய பில் 500.26 ரூபாய் அப்படின்னு வந்திருக்குனு வைச்சிக்குவோம்.. சரி ஒரு ரெளண்டா இருக்கட்டுமே அப்படின்னு 500 ரூபாய் மட்டும் கட்டினாலும் அடுத்த பில்லுல நமக்கு அதிர்ச்சி இருக்கு.. கட்டாம விட்ட .26 பைசாக்கு வட்டி போடறது மட்டுமில்லாம புதிய பில்லிங்ல இருக்கற அனைத்து பொருட்களுக்கும் சேர்த்துதான் வட்டி போட்டு அனுப்பியிருப்பாங்க..

டேய் என்னடா பண்ணியிருக்கீங்க.. நான் போனமாசம் கரெக்டா பில் கட்டியிருக்கண்டா.. எதுக்கு வட்டி அப்படின்னு கேட்டா.. கன்சர்ன் டிபார்ட்மென்ட்டுக்கு உங்க காலை டிரான்ஸ்ஃபர் பண்றேன் சார் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு.. மியூசிக்கைப் போட்டு விட்டுட்டுப் போயிடுவாங்க கஸ்டமர்கேர்ல.. கொஞ்ச நேரத்துல யாராவது ஒருத்தன் காலை எடுத்து திரும்பவும் கதை கேட்டுட்டு.. சார் நீங்க .26 பைசாவைக் கட்டாம விட்டு இருக்கீங்க.. இது சிஸ்டமேட்டிக் இல்லையா.. அதனால ஏற்கனவே உங்க பில்லிங்ல .1 பைசா பெண்டிங் இருந்தாலும் அதுக்கும் இந்த மாச பில்லிங்கும் சேர்ந்துதான் வட்டி போடுவோம் சார்.. நீங்க எங்களோட டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸை திரும்பவும் படிச்சுப் பாருங்க தெரியும்னு சொல்லுவான்.. அப்ப வரும் பாருங்க கோவம்.. என்னாங்கடா நினைச்சுட்டு இருக்கீங்க.. .26 பைசா கட்டாம மிஸ் பண்ணினதுக்கு இவ்வளவு வட்டி போடுவீங்களான்னு ரொம்பக் கத்தினோம்னா.. சரிங்க சார்.. கம்ப்ளைண்ட் நம்பர் நோட் பண்ணிக்கங்க.. வித்தின் 48 அவர்ஸ்ல உங்க பிரச்சினையை சால்வ் பண்றோம்னு சொல்லிட்டு வைச்சிடுவான்..

இதெல்லாம் தேவையா.. தேவையா.. ஒழுக்கமா அந்த .26 பைசாவையும் சேர்த்து கட்டியிருந்தா இவ்வளவு கத்த வேண்டியிருந்திருக்குமா.. அப்படின்னு நொந்துக்கிட்டு.. புது பில்லை அவங்க பிராசஸ் பண்ற வரைக்கும் அவங்களைத் திரும்பத் திரும்ப ஃபாலோ பண்ண வேண்டியிருக்கும்..

திரும்பவும் பில்லை ப்ராசஸ் பண்றதுக்கு.. இன்னும் நாலு முறை தொங்கி.. நானு.. அப்படின்னு ஆரம்பிச்சு.. திரும்பவும் பில்லை பிராசஸ் பண்றேன்னு சொல்லியிருக்காங்க.. என்னப்பா சொல்றீங்கன்னு அழுதவுடனே.. அப்புறம் பில்மாறி வரும்..

மக்களே இது என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் இல்ல.. நான் கிரெடிட் கார்டு வாங்கின அன்னைக்கு என்னோட பிரண்ட் ஒருத்தன் இப்படி ஒரு அனுபவத்தை சொன்னான்.. அதுல இருந்து பில் வந்ததுன்னா 5 ரூபாய் அதிகமாவே கட்டிடறது.. எதுக்கு வம்புன்னு..

இருந்தாலும் கிரெடிட் கார்டு வாங்கின புதுசுல அதை ஆன்லைன்ல அக்சஸ் பண்றதுக்கு பின் நம்பர் வேனும் இல்லையா.. அதை கார்டு அனுப்பி பின்னாடியே ஒரு 15 நாள்ல அனுப்புவானுங்க.. அது எனக்குத் தெரியாதே.. சரி கஸ்டமர் கேருக்குப் போன் பண்ணிக் கேப்பமே அப்படின்னு போன் பண்ணினேன்.. விசயத்தைக் கேட்டுட்டு.. சார் நாங்க வைச்சிருக்கற மெடிக்கிளைம் கார்டை சப்ஸ்கிரைப் பண்ணினாத்தான் புதுக் கஸ்டமருக்கு பின் நம்பர் அனுப்புவோம்.. உங்களுக்கு மெடிக்கிளைம் ஆக்டிவேட் பண்ணி விடட்டுங்களான்னு கேட்டுச்சு அந்தப் பொண்ணு..

அப்படியா... சரி இருங்க நான் திரும்ப போன் பண்றேன்னு.. எனக்கு அட்வைஸ் பண்ணின பிரண்டுக்குப் போன் பண்ணிக் கேட்டேன்... டேய் நல்லா மிளகாய் அரைச்சிருப்பாங்க உன் தலையில.. உனக்கு பின் நம்பர் வீடு தேடி வரும் வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு வைச்சிட்டான்.. எனக்கு அடப்பாவிகளான்னு ஆயிடுச்சு.. சரி இனி இந்தப் பயிலுககிட்ட கொஞ்சம் கவனமாகவே இருக்கனும்னு மனசுக்குள்ள உறுதி மொழியெடுத்துக்கிட்டேன்..

ஒரு மாசம் முடிஞ்சது.. முதல் முறையா கிரெடிட் கார்டு வாங்கியிருந்தனா.. அதனால தினமும் கார்டை ஒருமுறை பெருமையாக எடுத்துப் பார்த்துட்டு பர்ஸ்குள்ள வைச்சுப்பேன்.. ஒரு நாள் திரும்பவும் ஒரு கால் வந்தது.. சார் மெடிக்கல் இன்சூரன்ஸ் ஒன்னு உங்க பேர்ல 4 லட்சத்துக்கு ஆக்டிவேட் ஆயிருக்கு சார்.. நீங்க ஓகேன்னு சொன்னா.. இந்தக் போன் காலவே கன்பர்மேசனா எடுத்துக்கிட்டு உங்களுக்கு கொரியர் பண்ணிடுவேன்.. நீங்க மாசம் அதுக்கு 4 ஆயிரம் ரூபாய் கட்டனும்.. அதையும் உங்க கார்டுல இருந்தே லவட்டிக்குவோம்னு சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. என்னம்மா சொல்ற.. நான் எந்த மெடிக்கல் இன்சூரன்ஸுக்கும் அப்ளை பண்ணவே இல்லையே அப்படின்னேன்.. இல்லங்க சார் நீங்க கார்டு அப்ளை பண்றதுக்கு ஃபாம் ஃபில் பண்ணிங்க இல்லையா.. அதுல இருந்த ஒரு செக் பாக்சை டிக் பண்ணிட்டீங்க.. அதனால உங்க பேர்ல அப்பவே ஆக்டிவேட் ஆயி இன்னும் டெலிவரி பண்ணாம இருக்கு அப்படின்னு சொல்லுச்சு அந்தப் பொண்ணு.. இல்ல வேணாம் கேன்சல் பண்ணிடுங்கன்னேன்.. ஃபார் டி ஆக்டிவேசன்.. யூ நீட் டூ பே 25000 ருபீஸ் சார் அப்படின்னு சொல்லுது..

எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு.. இது என்னடா வம்பாப் போச்சுன்னு நான் இதே நம்பருக்கு உங்களைக் கூப்பிடறேன்னு சொல்லிட்டு.. கஸ்டமர் கேருக்கு கால் பண்ணி விசயத்தை சொல்லி விவரம் கேட்டேன்.. அதுக்கு அங்கே இருந்த பொண்ணு.. சார் நீங்க சொல்ற மாதிரி எதுவும் கிடையாது.. பொய் சொல்லியிருக்காங்க.. ஆனால் உங்களுக்காக நான் ஒரு ஸ்பெசல் ஆஃபர் வைச்சிருக்கேன்.. உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா சார் அப்படின்னு கேட்டுச்சு.. எனக்கு வந்தது பாருங்க கோவம்.. வாய் வரைக்கும் வந்திடுச்சு.. அடக்கிக்கிட்டு "நாட் இன்ட்ரஸ்டடு" அப்படின்னு சொல்லி வைச்சிட்டு.. எனக்கு ஃபோன் பண்ணி அன்னைக்கு நைட் தூக்கத்தைக் கெடுத்த பொண்ணுக்கு கால் பண்ணித் திட்டினேன் பாருங்க.. இதுவரைக்கும் தெரியாத பொண்ணுங்களை எல்லாம் திட்டினதே இல்ல.. அப்படி ஒரு திட்டு..

ஆனால் திட்டிட்டு வைச்சுட்டு கோவம்லாம் அடங்கினதுக்கு அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன்.. பாவம் அந்தப் பொண்ணு.. என்ன பண்ணும்.. அதோட பிழைப்பு அது.. இப்படி எல்லாம் பொய் சொல்லித்தான் ஒவ்வொருத்தரையா பிடிக்க வேண்டியிருக்குன்னு நினைச்சிக்கிட்டேன்..

சோ.. கிரெடிட் கார்டு யூஸ் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டோம்னா.. இதெல்லாம் நாம பாஸிட்டிவா எடுத்துக்கிட்டு.. நாம கவனமா இருந்துக்கனும்.. கஸ்டமர் கேர்ல இருந்து கால் பண்ணி எது வேனும்னு கேட்டாலும் சரி.. கண்ணை மூடிக்கிட்டு "நோ" சொல்லிடுங்க.. ரைட்டா..

ஜிமெயிலில் Handwriting உள்ளீட்டு வசதியை உருவாக்கிக்கொள்வதற்கு...?

கூகுள் நிறுவனமானது ஜமெயில் மற்றும் கூகுள் டொக்ஸ் ஆகியவற்றிற்கு தட்டச்சு மூலம் மட்டுமின்றி தற்போது கையால் எழுத்தும் எழுத்துக்களை உள்ளீடு (Input) செய்யும் வசதியை தந்துள்ளது.


இதன் மூலம் கூகுள் டொக்ஸில் 20 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும், ஜிமெயிலில் 50 இற்கு மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்தியும் உள்ளீடு செய்ய முடியும்.இதனை செயற்படுத்துவதற்கு முதலில் ஜிமெயிலினை ஓப்பன் செய்து, தொடர்ந்து செட்டிங்ஸ் செய்வதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.


அதில் General பகுதியில் தென்படும் Enable input tools என்பதை தெரிவுசெய்யவும். இந்த ஒப்சன் தென்படைவில்லையாயின் Show all language options இனை தெரிவு செய்யவும்.


அதன் பின்னர் Input Tools விண்டோ ஒன்று தென்படும், தொடர்ந்து மொழிகளை தேர்வு செய்ய வேண்டும்.


(குறிப்பு – கையெழுத்து மூலமான மொழிகளை தேர்வு செய்யும் ஒப்சன் பென்சில் ஐகானுடன் காணப்படும்)

இதன் பின்னர் சேமிக்கவும், இப்போது ஜிமெயில் விண்டோவானது Refresh ஆகும்.


தொடர்ந்து Handwriting  ஆப்சனை பயன்படுத்துவதற்கு ஆப்பிள் கணினிகளில் Cmd + Shift + K என்ற கீக்களையும், ஏனைய கணினிகளில் Ctrl + Shift + K ஆகிய கீக்களையும் பயன்படுத்த முடியும்.

ஒரே டிவி இரண்டு சேனல்கள் ஒரே நேரத்தில் சாத்தியாமாயிடுச்சி!



டி வி பார்க்க ஆரம்பித்த காலம் முதல் ரிமோட்டுக்கு நடக்கும் தின ரகளைகள் உலகம் முழுவதும் உண்டு. அந்த வகையில் மக்களுக்கு ஒரு நல்ல விஷயமாக சமீபத்தில் ஓலெட் (OLED) வகை டிவிகளை உருவாக்கியுள்ளனர்.


இதன் மூலம் நீங்கள் ஒரெ டிவியில் இரண்டு சேனல்களை லைவாய் பார்க்க முடியும்.


எப்படி? டிவியை ஆன் செய்த பிறகு ஆப்ஷன் 1 ஆப்ஷன் 2 சேனலை செலக்ட் செய்து அப்புறம் ஆளுக்கு ஒரு கண்ணடியை போட்டால் அந்த அந்த கண்ணாடிக்கு அந்த அந்த சேனல் மட்டும் தெரியும்.


இதன் திரை சினிமா திரை போன்று சற்று சாய்ந்து இருப்பதால் இதன் குவாலிட்டி சூப்ப்ர்ங்கோ….


வழக்கம் போல நீங்கள் கில்மா சேனலும் / உங்க வீட்டமா உப்புமா சீரியலும் பார்த்து கலக்குங்க…….

‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்!

 

யூ எஸ் பி எனப்படும் ஒரு டிவைஸ் வராத கணனியே இல்லை.


 இதன் முதல் தலை முறை இரண்டாம் தலைமுறைக்கு அடுத்து மூன்றாம் தலைமுறையில் நெக்ஸ்ட் ஜெனரேஷன் யூ எஸ் பி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளனர்.


இதன் மூலம் நீங்கள் விரைவாக யூ எஸ் பி சேவையை பெற முடியும் என்பதை விட இதில் எந்த கோண்த்தில் இருந்தும் சொருக முடியும்.


தற்போது நிறைய யூ எஸ் பிக்களை தவறான சைடில் சொருகி லேப்டாப் டேமேஜ் ஆகிவிடும் அல்லது யூ எஸ் பின் உடைந்து விடும். அல்லது சில டிவைசை மாட்டவே முடியாது என்பதுடன் அதற்க்கு மேல் ஃபீமேல் எக்ஸ்டென்ஷன் வேண்டும்.


 இந்த கருமத்தை அனேக டேட்டா கார்டுகளில் / யூ எஸ் பி டாங்கிளில் நீங்கள் பார்த்தீருப்பீர்கள்.


இனிமேல் அந்த கவலை தேவையில்லை எப்படி சொருகினாலும் அது வேலை செய்யும்.


 இதன் மூலம் யூ எஸ்பியில் சார்ஜ் ஆகும் டிவஸ்களின் சார்ஜ் நேரம் குறையும் 1/3 ஆப்பிள் 5 எஸ் சார்ஜர் PIN இந்த வகையில் தான் வடிவமைப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா???

கிருபானந்தவாரியார்-சொற்பொழிவிலிருந்து....


 கடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடி !!!


ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்” என்றான்.

“தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.”

“ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?”

“தம்பீ, காண முயலுகின்றேன்.”

“கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?”

“இல்லை.”

“கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?”

“இல்லை.”

“ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?”

“அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?”

“தேன் பாட்டில்.”

“தேன் இனிக்குமா, கசக்குமா?’

“என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.”

“தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.”

மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

“ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.”

பெரியவர் புன்முறுவல் பூத்தார். “அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”

என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. “பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.”

“தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?” “இல்லை.”

“என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.”

மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

“என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?”

“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”

“என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” “தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?”

“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”

“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”

“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”

“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”

“ஆம்! தெரிகின்றன.”

“முழுவதும் தெரிகின்றதா?”

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும் தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?”

மாணவன் விழித்தான்.

“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”

“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?” “முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”

“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”

“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.”

“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.”

“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.

தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம் தெரியவில்லை!” என்றான்.

“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”

“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.”

“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”

“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?”

“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.”

குழந்தை விரல் சூப்புவது ஏன்?

மன்னன் யுவனாச்வன் எடுத்திருக்கும் முடிவை அறிந்த மந்திரிகள் திகைத்தார்கள். அவர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. கூடிக் கூடி விவாதித்தார்கள். இஷ்வாகு மன்னனான யுவனாச்வனுக்கு வாரிசு இல்லை என்று நாடே கவலைப்படுகிறது. அரசியும் அளவற்ற வேதனையில் ஆழ்ந்திருக்கிறாள். இதனிடையில் மன்னன் கானகம் சென்று தவமியற்ற முடிவெடுத்து விட்டானே? மன்னன் முடிவை எப்படி மாற்றுவது? ‘‘மன்னா! இன்னும் சிறிதுகாலம் பொறுங்கள். நாங்கள் சில முனிவர்களை அணுகி வருகிறோம். தங்கள் ஜாதகத்தைக் காட்டி, யாகத்தாலோ மந்திரங்களாலோ தங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்ட வழியுண்டா என்று விசாரித்து வருகிறோம்.


அதற்குள் கானகம் சென்று தவமியற்ற அவசரப்பட வேண்டாம்!’’ வயதில் மூத்த தலைமை மந்திரி யுவனாச்வனிடம் வேண்டினார். ஆனால், மன்னன் தன் முடிவில் உறுதியாக இருந்தான். எத்தனை காலம் இப்படி வேதனையைச் சுமந்து வாழ்வது? மந்திரிகளிடம் அவர்கள் சிறந்த புத்திசாலிகள் என்றும் மன்னன் இல்லாவிட்டாலும் அவர்களே நாட்டைச் சிறப்பாக நிர்வகித்து ஆளமுடியும் என்றும் சொல்லிவிட்டான். நிலைமை இவ்வளவு நெருக்கடியாக, இத்தனை சீக்கிரம் உருவாகும் என்று மந்திரிகள் எண்ணியிருக்கவில்லை. மன்னன் இல்லாவிட்டால் பகை நாட்டினர் தைரியமாகப் போரிடத் துணிவார்களே! தாங்கள் நாட்டை ஆள்வதாவது?


நாட்டுக்கு ஆசைப்பட்டு மந்திரிகள் மன்னனைக் காட்டுக்குத் துரத்திவிட்டார்கள் என்றல்லவோ மக்கள் பேசுவார்கள்? நமக்கெதற்கு அந்தப் பழி? மேலும் இந்த மன்னனுக்குப் புத்திரனில்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு என்ன குறை இருக்கிறது? இவனைப் போன்ற சிறந்த மனிதனை எங்கு தேடினாலும் காணக் கிடைக்காது. மந்திரிகள் ஒரு முடிவு செய்தார்கள். காட்டில் கடும் தவம் இயற்றிவரும் பார்க்கவ முனிவரை அணுகுவதென்றும் இந்தப் பிரச்னைக்கு அவர் காட்டும் வழியைப் பின்பற்றுவதென்றும் தீர்மானித்தார்கள். அன்றே அவசரமாகக் கானகத்திற்குப் புறப்பட்டார்கள். தவம் செய்ய முடிவு செய்திருக்கும் மன்னன் தங்கள் முயற்சியைத் தடுத்துவிடக் கூடும் என்றெண்ணி மந்திரிகள் மன்னனிடம் தாங்கள் பார்க்கவ முனிவரைப் பார்க்கப் போவதைத் தெரிவிக்கவில்லை.


அப்படித் தெரிவிக்காதது எத்தனை பெரிய சிக்கலை உருவாக்கப் போகிறது என்பதையும் அவர்கள் அப்போது அறியவில்லை. ஏற்கெனவே அரசிக்கு மன்னன் கானகம் செல்ல முடிவெடுத்திருப்பது உள்பட அனைத்தும் தெரியும். தன் விதியை நொந்துகொண்டு அவள் அன்றிரவு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நள்ளிரவில் எழுந்த மன்னன் சாளரத்தின் வழியே நிலவொளியில் தெரிந்த மனைவியின் முகத்தைச் சற்றுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் முகத்தில் படர்ந்திருந்த கூந்தலை மெல்லக் காதோரமாக ஒதுக்கிவிட்டான். போர்வையை எடுத்துப் பரிவோடு போர்த்தி விட்டான். உத்தமமான மனைவி.


அழகில் மட்டுமல்ல, பண்பிலும் சிறந்தவள். தன்னால் இவளுக்குப் புத்திர பாக்கியம் தர இயலவில்லையே! தன்னையே குழந்தைபோல் எண்ணித் தன்மேல் தாளாத பாசம் செலுத்துபவள். தன்னைப் பிரிய நிச்சயம் உடன்பட மாட்டாள். இவளிடம் சொல்லாமலே தான் கானகம் செல்ல வேண்டும். பூனைபோல் மெல்லப் பதுங்கி எழுந்த மன்னன், அரண்மனையை விட்டு வெளியேறி யாருமறியாமல் நாட்டை அடுத்திருந்த ஒரு கானகத்தை நோக்கி நடந்தான்.


அவன் தவம் செய்ய எண்ணிச் சென்ற கானகமும் பார்க்கவ முனிவரைத் தேடி மந்திரிகள் சென்ற கானகமும் ஒன்று என்பதை இரு தரப்பினரும் அறியவில்லை. அதனால் ஒரு விபரீதம் நேரப் போவதையும் அவர்கள் யாரும் அப்போது உணரவில்லை. மன்னன் தவம் செய்ய இடம்தேடிக் கானகத்தில் ஒருபுறம் அலைந்து கொண்டிருந்த வேளையில், மந்திரிகள் அதே கானகத்தில் இன்னொரு புறம் இருந்த பார்க்கவ முனிவரின் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார்கள். முனிவர் அவர்கள் சொல்வதனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.


ஒரு மன்னன் மேல் இத்தனை மந்திரிகள் இப்படியொரு பாசம் செலுத்துகிறார்கள் என்றால் அவன் மிக உயர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார். மாபெரும் தவசீலரான அவர் அந்த மன்னனின் பிரச்னையைத் தீர்க்கத் திருவுளம் கொண்டார். அந்தக் கானகத்தில் நீர்நிலைகள் அபூர்வம் என்றும் வடக்குப் பக்கமாக உள்ள ஒரே ஒரு குளம்தான் குடிக்கும் வகையில் தண்ணீர் தரக் கூடியது என்றும் சொல்லி, அங்குபோய் இறைவனைப் பிரார்த்தித்து, ஒரு சிறு செம்பில் தண்ணீர் எடுத்து வருமாறு மந்திரிகளைப் பணித்தார். மந்திரிகள் மிகுந்த நம்பிக்கையோடு செம்பில் நீர் கொணர்ந்தார்கள். நீர்ச்செம்பைக் கையில் வாங்கிக் கொண்ட பார்க்கவர் இறைவனைத் தியானம் செய்தார்.


பின் மந்திரிகளிடம் சொல்லலானார்: ‘‘அன்பர்களே! நான் இந் தக்கலச நீருக்கு வலிமையேற்றும் வகையில் முழு மன ஒருமைப்பாட்டோடு, புத்திர பாக்கியத்தைத் தரும் மந்திரத்தை ஜபம் செய்யப் போகிறேன். ஒரு லட்சத்து எட்டு முறை அந்த மந்திரம் ஜபிக்கப்பட வேண்டும். என் ஒருமைப்பாடு சிதறும் வகையில் நீங்கள் யாரும் எந்த சப்தமும் செய்யக் கூடாது. எந்தப் பேச்சும் பேசாமல் அமைதியாக இருங்கள். என் ஜப எண்ணிக்கை முடியும்வரை நான் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன். என் ஜபம் முடியும்வரை நீங்களும் இறைவனை மனத்தில் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.’’


மந்திரிகளில் ஒருவர் தயக்கத்தோடு கேட்டார்: ‘‘சுவாமி! அப்படி நீங்கள் ஜபித்த தண்ணீரை எங்கள் அரசி குடித்தால் அவள் கர்ப்பமடைவது உறுதி தானே?’’ பார்க்கவ முனிவர் நகைத்தார். ‘‘நான் ஜபித்த தண்ணீரை ஒரு விலங்கு அருந்துமானால் அது கர்ப்பமடைந்து ஒரு மனிதக் குழந்தையைப் பிரசவிக்கும். ஏன் ஒரு பாறையில் இந்தத் தண்ணீரைக் கொட்டினால் பாறை கர்ப்பமடையும்; பத்து மாதங்களில் பாறையைப் பிளந்துகொண்டு ஒரு மனிதக் குழந்தை பிறக்கும்!


அவ்வளவு அபூர்வமான மந்திரத்தை ஜபிக்கப் போகிறேன். உங்கள் நாட்டுக்கு ஒரு வாரிசு தோன்றப் போவது உறுதி.’’மலர்ச்சியோடு சொன்ன முனிவர், விழிகளை மூடி ஜபம் செய்யலானார். மந்திர உரு ஏற ஏற செம்பில் இருந்த நீரின் வலிமையும் ஏறிக் கொண்டே இருந்தது. ஆனால், லட்சத்து எட்டு முறை ஜபிப்பதற்கு எத்தனை நேரம் ஆகும் என்று மந்திரிகளால் ஊகிக்க இயலவில்லை. நேரம் கடந்துகொண்டே இருந்தது. முனிவரோ கண்ணைத் திறக்கவில்லை. ஜபத்தை நிறுத்தவும் இல்லை. அவர் தம் ஆழ்மனத்தில் லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கை முடியும் வரை ஜபிப்பது என்று சங்கல்பம் செய்திருந்தார். லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கை வந்ததும் தம் ஆழ்மனமே தமக்கு அறிவுறுத்தும் என அவர் அறிவார். மந்திரிகளின் கண்களைத் தூக்கம் தழுவியது. சூரியாஸ்தமனம் ஆகிவிட்டதால் ஆசிரமத்தின் உள்ளே இருள் படர்ந்தது. மந்திரிகள் ஒவ்வொருவராகத் தாங்கள் இருந்த இடத்திலேயே அப்படியே படுத்து உறங்கலானார்கள்.


மறுநாள் சூரியோதயம் ஆகும் தருணம். இருள் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை. முனிவர் தன் ஜபம் முடித்து கண் திறந்தார். கலசத்தில் இருந்த புனித நீரை நிறைவோடு பார்த்தார். இனி அது தன் வேலையைச் செய்யும் என்பதை அவர் அறிவார். கலசத்தைச் சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக வைத்து, கலசத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு மெல்ல எழுந்தார். மந்திரிகள் அனைவரும் களைப்பில் உறங்குவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். குழந்தை மனம் படைத்த நல்லவர்கள் இவர்கள். அந்த மன்ன னுக்கு இத்தகைய மந்திரிகள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். காலைக் கடன் முடித்து குளித்து நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்வதன் பொருட்டு ஆசிரம வாயில் கதவைத் திறந்துகொண்டு கமண்டலத்தோடு நீர்நிலை நோக்கி நடந்தார்.


மன்னன் யுவனாச்வன், தவமியற்றத் தகுந்த இடம் தேடி அன்று முழுவதும் கானகமெங்கும் திரிந்தான். அடர்த்தி மிகுந்த அந்தக் கானகத்தில் அத்தகைய இடம் வாய்ப்பது அபூர்வமாக இருந்தது. நடந்து நடந்து அவன் கால்கள் கெஞ்சின. தாகத்தால் உயிரே போய்விடும்போல் இருந்தது. மழைநீரால் வளம் பெற்று மரங்கள் அடர்ந்துள்ள இந்தக் கானகத்தில் குடிக்கத் தண்ணீர் தரும் நீர்நிலையையே காணோமே? ஒரு பகல் முழுதும் சுற்றி இரவும் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.


ஆனால், ஒரு குளத்தையோ குட்டையையோ கண்டுபிடிக்க முடியவில்லையே? மன்னன் கால்வலியோடும், தாகத்தோடும், சலிப்போடு நடந்துவந்தபோதுதான் அதிகாலைக் கருக்கலின் மெல்லிய இருளில் அந்த ஆசிரமம் அவன் கண்ணில் பட்டது. வாயில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். பசியாலும் தாகத்தாலும் அவன் விழிகள் மங்கியிருந்தன. ஆசிரமத்தினுள் யார் யாரோ படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யார் என இருள் காரணமாக அவனால் அடையாளம் காண இயலவில்லை. ஓர் ஓரத்தில் ஒரு செம்பில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. தாகம் பொறுக்காத மன்னன் அந்தச் செம்பு நீரை எடுத்துக் கடகடவெனக் குடித்தான். பின் அப்படியே கீழே சாய்ந்து அவனும் உறக்கத்தில் ஆழ்ந்தான். வெளியே சென்ற பார்க்கவ முனிவர் திரும்புவதற்குள் சூரியன் நன்கு உதயமாகி விட்டான். ஆசிரமத்தின் உள்ளே வந்தவர் அனைவரும் இன்னும் உறங்குவதைப் பார்த்து நகைத்துக் கொண்டார்.


மிகுந்த நம்பிக்கையோடு செம்பைப் பார்த்தார். இதென்ன, செம்பில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூடக் காணோமே? நாம் செய்த மந்திர ஜபம் எல்லாம் வீணாகி விட்டதே? அவர் மனம் திடுக்கிட்டுப் பதறியது. கூச்சலிட்டு அனைவரையும் எழுப்பினார். மன்னன் எழுந்து தன் மந்திரிகளெல்லாம் அங்கிருப்பதைப் பார்த்துத் திகைத்தான். பின் விசாரித்து விஷயங்களை அறிந்துகொண்டான். ‘‘நான் மந்திர ஜபம் செய்த இந்தச் செம்பு நீர் எங்கே போயிற்று?’’ என வினவினார் முனிவர். ‘‘கடும் தாகம் காரணமாக நான்தான் தெரியாமல் அருந்தி விட்டேன்! என்னை மன்னிக்க வேண்டும்!’’ என முனிவரைப் பணிந்தான் மன்னன். ‘‘மன்னனே! நீ தெரியாமல் செய்த செயலாலும் நன்மையே உண்டாயிற்று. உன் மனைவி கர்ப்பமடைவதற்கு பதிலாக இந்த நீரை அருந்திய நீ கர்ப்ப மடைவாய். இன்னும் பத்து மாதத்தில் உன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உன் வாரிசு பிறக்கும். இது உறுதி!’’


இதைக் கேட்டு மந்திரிகள் பதறினார்கள். ‘‘சுவாமி! வயிற்றைக் கிழித்துக் கொண்டு வாரிசு பிறந்தால் எங்கள் மன்னர் இறப்பாரே? எங்களுக்கு மன்னரும் வேண்டுமே? வாரிசு வளர்ந்து வாலிபனாகும்வரை நாட்டை யார் ஆள்வது?’’ மன்னன் மேல் மந்திரிகள் செலுத்திய பேரன்பைப் பார்த்து முனிவர் நெகிழ்ந்தார். ‘‘கவலைவேண்டாம். இந்த மந்திர ஜபத்தின்போதே சுகப்பிரசவம் நடக்கவேண்டும் என்ற உப மந்திரத்தையும் சேர்த்துத்தான் ஜபித்திருக்கிறேன். எனவே சுகப் பிரசவம்தான் நடக்கும். மன்னன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு குழந்தை பிறந்தாலும் உடனே வயிறு கூடிக் கொள்ளும். விரைவில் புண் ஆறி மன்னன் சரியாகி விடுவான்!’’


முனிவரின் பதிலால் நிறைவடைந்த மந்திரிகளும் மன்னனும் அவரை நமஸ்கரித்து விடைபெற்று அரண்மனை சென்றார்கள். ராணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், குழந்தை பிறந்தால் அது தாய்ப்பாலுக்கு என்ன செய்யும் என்பதை மட்டும் யாரும் எண்ணிப் பார்க்கவில்லை! பத்து மாதம் கழித்துக் குழந்தை பிறந்தது. மன்னனும் அரசியும் மந்திரிகளும் மக்களும் மனம் மகிழ்ந்தார்கள். ஓர் ஆண், பிள்ளை பெற்ற அதிசயத்தைப் பார்க்க வானில் தேவர்கள் குழுமினார்கள். இந்திரன் மற்ற தேவர்களிடம் சொன்னான்: ‘‘உலகில் எல்லோரும் பெண் பெற்ற பிள்ளைகள் என்ற வகையில் பெண் பிள்ளைகள் தான். இதோ இவன் ஒருவன்தான் உண்மையான ஆண் பிள்ளை!’’


மற்ற தேவர்கள் கலகலவென நகைத்தார்கள். இப்போது குழந்தை அழத்தொடங்கியது. தாய்ப்பாலுக்கு என்ன செய்வது? ‘‘தேவேந்திரா! இந்தப் பிரச்னையைத் தாங்கள் எவ்விதமாவது தீர்த்து வைக்கலாகாதா?’’ குழந்தை மேல் கொண்ட பாசத்தோடு மற்ற தேவர்கள் வேண்டினார்கள். ‘‘இந்தக் குழந்தை உயிர்வாழ எதைக் குடிக்கும்?’’ என்று கேட்டார்கள். ‘‘குழந்தையின் விரலை அதுவே தன் வாயில் வைத்துக் கொண்டு அதைக் குடிக்கும். குழந்தை உயிர்வாழத் தேவையான சக்தியை அதன் விரலே அதற்குக் கொடுக்கும். இந்த அபூர்வக் குழந்தையின் ஞாபகமாக இனி உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுமே பசி தோன்றும்போது, தன் விரலைத் தானே தன் வாயில் வைத்து உறிஞ்சி சமாதானம் அடையும்!’’ என வாழ்த்தினான் இந்திரன். அந்தக் குழந்தை இந்திரன் ஆசீர்வாதத்தோடு மாந்தாதா என்ற பெயர்பெற்று வளர்ந்தது. வாலிப வயதடைந்து அவன் அரசனானான். அதன்பின் மன்னன் யுவனாச்வன் தன் நெடுநாள் ஆசைப்படிக் கானகம் சென்று தவம் நிகழ்த்தி முக்தி அடைந்தான்.


(மகாபாரதம் ஆரண்ய பர்வம் பகுதியில் இடம்பெற்றுள்ள இக்கதை, சின்னஞ்சிறு குழந்தைகள் ஏன் விரலை உறிஞ்சுகிறார்கள் என்பதற்கான காரண த்தை சுவாரஸ்யமாக இவ்விதம் விளக்குகிறது.)