Pages

Subscribe:

Ads 468x60px

Wednesday, 27 November 2013

ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய நானோ 3 டி கேமிரா!

 nov 28 -nano car

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்.ஐ.டி.) ஆய்வாளர்கள் நவீன நானோ கேமிரா ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய திறன் பெற்றது.இந்த தொழில்நுட்பத்தில் தற்போது சில கருவிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மழை, பனி அல்லது ஒளி ஊடுருவும் பொருட்கள் ஆகியவற்றையும் எளிதில் படம் பிடிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டு உள்ளது என்பது விசேஷ தகவல்.

டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்பாதை அவ்வப்போது ஒளிபரப்புகிறார்ர்கள். அது ஒவ்வொரு முறையும் மிகவும் வியப்பாகவே இருகிறது. ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦ வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள் பார்த்த இடம், பழகின மக்கள் இப்படி எல்லாமே மாறிப் போயிருக்கும். ஏனெனில் ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணித்த இரண்டு வாரப் பயணமானது பூமியில் 250 வருடங்களாகியிருக்கும். ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணிக்கும்பொழுது காலமே மெதுவாகத்தான் நகருமாம்.

இந்த ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய திறன் பெற்ற நவீன நானோ கேமிரா ஒன்றை வடிவமைத்துள்ளனர் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்.ஐ.டி.) ஆய்வாளர்கள்.இதன் விலை 500 டாலர்(நம்மூர் மதிப்பில் சுமார் 32 ஆயிரம்(ஆகும்.இதில் சிற்பம்சமாக கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கையாக அதனை கண்டுபிடிக்கும் கருவியாகவும் பயன்படுத்தலாம் என்பதுதான்,
அத்துடன் மருத்துவ பயன்பாட்டிற்கும் மற்றும் கேம்ஸ்களில் பயன்படும் கருவிகளின் துல்லியத்தை அதிகரிக்கவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்படுகிறது. 3டி கேமிரா வகையை சேர்ந்த இதனை எம்.ஐ.டி. ஆய்வாளர்களுடன் இணைந்து இந்திய ஆராய்ச்சியாளர்களும் வடிவமைத்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தில் தற்போது சில கருவிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மழை, பனி அல்லது ஒளி ஊடுருவும் பொருட்கள் ஆகியவற்றையும் எளிதில் படம் பிடிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டு உள்ள இந்த கேமிரா டைம் ஆப் பிளைட் தொழில்நுட்பம் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒளி அலைகள் ஒரு சமதள பரப்பில் பட்டு பின் அது சென்சாருக்கு திரும்பி வருவதை அடிப்படையாக கொண்டு பொருள் அமைந்திருக்கும் இடம் கணக்கிடப்படுகிறது.

ஒளியின் வேகம் தெரியுமென்பதால் அதனடிப்படையில் ஒளி அலை பயணம் செய்து மற்றும் அது பொருளில் பட்டு திரும்பி வருவதை கேமிரா எளிதில் கணக்கிடுகிறது. இந்த கேமிராவை எம்.ஐ.டி.யின் ஆய்வாளர்கள் ரஸ்கார் என்பவர் தலைமையில் உருவாக்கியுள்ளனர்.

கொங்கு மண்டல மலைகளும் கோட்டைகளும்!

 1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை

2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி,
பாலமலை, பெருமாள் மலை

3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை

4 . உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை

5 . பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை

6 . தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன் மலை

7 . ஈரோடு - சென்னிமலை, பெருமாள் மலை

8 . கோபி - தவளகிரி, குன்றத்தூர்

9 . பவானி - பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை

10. கொள்ளேகால் - மாதேசுவரன் மலை

11 . திருச்செங்கோடு - சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு

12 . இராசிபுரம் - கொங்கணமலை, கொல்லிமலை

13 . சேலம் - - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி

14 . நாமக்கல் - - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை

15 . கரூர் - - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை

16 . பழனி - - ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை.

கொங்கு நாட்டில் 51 கோட்டைகள் உள்ளன. கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம், பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு,காங்கேயம், கரூர், விஜயமங்கலம்,அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர், நெருஞ்சிப் பேட்டை, மேட்டூர், சரம்பள்ளி , காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அமதன் கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை, பெண்ணகரம்,பெரும்பாலை,சோழப்பாவு,தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை, ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல், 300 அடி, சங்ககிரி - 1500 அடி, சதுரகிரி - 3048 அடி, கனககிரி - 3423 அடி, மகாராசக்கடை - 3383 அடி, தட்டைக்கல் துர்க்கம் - 2029 அடி. இரத்தினகிரி - 2800 அடி, சூலகிரி - 2981 அடி, ஆகியன கொங்கு நாட்டுக் கோட்டைகளாம்.

14 ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள் பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15 ஆம் நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன. திண்டுகள், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி, கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும் சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின.

அகத்தின் அழகு...கட்டுரை.!

அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒருசொல் ‘பர்சனாலிட்டி’ அதாவது ஆளுமை. இச்சொல்லுக்கு பலர் பலவிதமாக பொருள் கொள்கின்றனர். ஆடை அலங்காரத்துடன் ஒய்யாரமாக வரும் ஒரு நபரைப் பார்த்து ‘என்ன பர்சனாலிட்டி!’ என்று வியப்பதுண்டு. இதுதான் ஆளுமை? என்று கேட்டால் ‘இல்லை’ என்பதுதான் பதில். அதாவது ஆளுமைப் பண்பின் ஒரு சிறு பகுதி இது என்று கூறலாமே அன்றி இதுவே ஆளுமைப் பண்பு என்று கூறமுடியாது.

ஒரு மனிதனின் ஒட்டு மொத்த வளர்ச்சிதான் ஆளுமை என்பது. ஆளுமை என்பது புறத் தோற்றத்தையும், அகத்தோற்றத்தையும் உள்ளடக்கியது. இவ்விரண்டில் புறத் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்வது எளிது. எடுத்துக்காட்டாக ஒருவரை பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்று ஒரு நூறு ரூபாய் செலவு செய்தால் போதும். முகப் பொலிவு வந்து விடும். ஒரு ரெடிமேட் ஆடை கடைக்கு சென்று ஆயிரம் ரூபாய் செலவு செய்து ‘டிரஸ்’ வாங்கி அணிவித்தால் போதும். பகட்டான தோற்றம் தானாக வந்து விடும்.

ஆனால்… அகத்தோற்றத்தை அழகுபடுத்து வது அவ்வளவு சாதாரண காரியமல்ல, பணத்தால் சாதிக்கக்கூடியதும் அல்ல. பேசுதல், எண்ணுதல், நினைத்தல், நேசித்தல், பழகுதல் போன்றஅனைத்தையும் உள்ளடக்கியது அகத்தோற்றம். புறத்தோற்றத்தை அழகுபடுத் தியது போல் அதிரடியாக அகத்தோற்றத்தை அழகுபடுத்த முடியாது. ஒரு விதை முளைத்து வளர்ந்து செடியாவதைப் போல் படிப் படியாகத்தான் அகத்தை அழகு படுத்த முடியும்.

ஒருவரது புறஅழகுதான் பிறர் கண்களுக்கு முதலில் தெரியும். அதுதான் பிறரோடு முதலில் பேசும். ஒரு கூட்டத்தில் முதன்முதலாக ஒருவரை சந்திக்கும்போது அவருடைய ஆளுமையை அவரின் புறத்தோற்றத்தை வைத்து கணிக்கிறோம். அவரோடு பேசிப் பழகி அவரின் அகத்தோற்றத்தை அறிந்த பிறகே அவரது ஆளுமைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறோம். ஆரம்பத்தில் புற அழகு மட்டுமே பேசும். கொஞ்சம் கொஞ்சமாக அகஅழகு பேச ஆரம்பித்ததும் புறஅழகு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். ஆக அகத்தின் அழகுதான் ஒருவரின் உண்மையான அழகு.

மனிதனின் ஆளுமைப் பண்புகளுக்கு முக்கிய காரணங்களாக இருப்பவை 1) அவனது ‘மரபுநிலை’ (Heredity) 2) அவன் வளரும் ‘சூழ்நிலை (Environment). மரபுநிலை என்பது பிறக்கும் போதே கொடுத்தனுப்பப்படும் சீதனம். அதாவது ஒரு குழந்தை தாயின் கருவறையில் கருமுட்டையாக உருவெடுக்கும்போதே, தன் தாய் தந்தை ஆகியோரிடமிருந்து சில முக்கிய பண்புகளைக் குரோமசோம்களின் வாயிலாக பெறுவது.

சூழ்நிலை என்பது வளரும் போது நமக்கு கிடைப்பதும், நாமே பெற்றுக் கொள்வதும் ஆகும். அதாவது ஒரு குழந்தையின் வளர்தலுக் கும், வளர்ச்சிக்கும் காரணமாயிருப்பவை அனைத்தும் ‘சூழ்நிலை’ எனப்படும். ஒரு குழந்தையின் நடத்தையைப் பாதிக்கும் மற்றவர் களின் செயல்கள், பேச்சுகள், மனப்பாங்குகள் ஆகிய அனைத்துமே சூழலில் அடங்கும்.

இவ்விரண்டில் எது முக்கிய பங்கு வகிப்பது என்பதைப் பற்றி விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ‘ரோஜா செடியி லிருந்து மல்லிகைப் பூவை பெறஇயலாது என்றும் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்றும் மரபு நிலைவாதிகள் வாதிடுகின்றனர்.

ஒருவனால் செய்து முடிக்கப்படும் செயல் களை, தக்க வாய்ப்புகளும், ஊக்குவிக்கும் சூழ்நிலையும் தரப்பட்டால் வேறு எந்த ஒருவனாலும் செய்து முடிக்க இயலும்’ என்பது சூழ்நிலைவாதிகளின் கருத்தாகும். சூழ்நிலை வாதியான வாட்சன் ‘என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். எத்தன்மை யுடையவர்களாக அவர்கள் வரவேண்டும் என்று முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சூழ்நிலை யின் உதவி கொண்டே பேரறிஞர்களாகவோ, பெருங்குற்றவாளிகளாகவோ அவர்கள் உருவாகும்படி செயது காட்டுகிறேன்”என்கிறார்.

மரபு, சூழ்நிலை ஆகிய இந்த இரண்டும் இணைந்தே மனிதனின் ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. ஒன்று மட்டும் தனித்து இயங்குவதில்லை. பிறப்பால் பெற்றதிறன்களும் ஆற்றல்களும் முறையான பயிற்சி இன்றி மலர முடியாது. மாங்கொட்டையிலிருந்து பலாச் செடிûயைப் பெறமுடியாது. அதே போன்று மாங்கொட்டையைத் தகுந்த நிலத்தில் இட்டு நீர்பாய்ச்சி உரமிட்டு வளர்த்தால் ஒழிய அது செடியாக வளர்ந்து மரமாகி காய்ப்பதில்லை.

ஒரு குழந்தை நல்ல மனிதனாக வளர்ச்சி யடைய வேண்டுமெனில் அக்குழந்தையின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, சமூக வளர்ச்சி, ஆளுமை வளர்ச்சி ஆகிய அனைத்தும் வளர்ந்திட வேண்டும். இவையனைத்தும் வளர்வதற்கான உள்ளாற்றல்களை குழந்தை மரபுவழியே பெற்றிருந்தாலும், அவ்வாற்றல்களின் வளர்ச்சி யையும், தரத்தினையும் நிச்சயிப்பது சூழலே யாகும். ஆக குழந்தையின் வளர்ச்சி என்பது மரபு, சூழல் இவை இரண்டின் கூட்டு விளைவாகும்.

ஆனால் ‘மரபு, சூழல் ஆகிய இவ்விரண்டில் எது மேலோங்கி நிற்பது’ என்று ஒரு பட்டி மன்றம் வைத்தால் நிச்சயம் ‘சூழல்’தான் வெல்லும். அதாவது மரபுக்கூறுகளை மாற்றி அமைக்கும் சக்தி நம் கையில் இல்லை. ஆனால் மரபுக் கூறுகளின் குறைநிறைகளை சூழலின் வாயிலாக மாற்றி அமைக்கும் சக்தி நம் கையில்தான் உள்ளது. ‘விதியை மதியால் வெல்லலாம்’ என்ற பழமொழி இக்கருத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஒரு மனிதனுடைய சிறந்த ஆளுமைப் பண்பின் ரகசியம் அவன் எவ்வாறு ‘சூழல்’ என்கிற காரணியை தன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதில் மறைந்திருக்கிறது.

மக்களை ‘நிறையாளுமை’ உடையவர்கள் என்றும் ‘குறையாளுமை’ உடையவர்கள் என்றும் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். நிறையாளுமை உள்ளவர்கள் பொறுப்புகளை முன்வந்து ஏற்றுக் கொள்வார்கள். பிரச்சனைகளை சந்திக்க தயங்க மாட்டார்கள். சுய மதிப்பீடு செய்து கொள்ளுவார்கள். பிறர் நலத்தில் அக்கறைகாட்டுவார்கள். அனைத் திற்கும் மேலாக தாமும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். தம்மோடு இருப்பவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். குறையாளுமை உள்ளவர்கள் தாழ்வு மனப்பான்மை, அவநம்பிக்கை, குழப்பம், குற்றஉணர்வு ஆகியவற்றின் இருப்பிடமாக இருப்பார்கள். இவர்கள் தங்களையும் சோகத்தில் ஆழ்த்திக் கொண்டு உடன் இருப்பவர்களையும் சோகத்தில் தள்ளி விடுவார்கள்.

நல்ல ஆளுமை உள்ளவன்தான் நல்ல தலைவனாக விளங்க முடியும்.

தலைமை என்பது ஒரு நிறுவனத்துக்கு அல்லது ஒரு பள்ளி கல்லூரிக்கு மட்டும்தான் என்று நினைத்து விடக்கூடாது. குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி ஆகியோரும் கூட ஒரு வகையில் தலைமை பீடத்தில் இருப்பவர்கள் தாம். சாதாரணப் பேச்சில் கூட ஒருவரின் ஆளுமைத் தன்மை வெளிப்படும். உதாரணமாக, “நீங்கள் வாங்கி வந்த காய்கறி மகா மட்டம்” என்று மனைவி சொன்னால் ‘எந்த நாய் சொன்னது’என்று கேட்கக் கூடாது. ‘அப்படியா? தப்பாக வாங்கி வந்துவிட்டேன். அடுத்த முறைசரியாக வாங்கி வருகிறேன்’ என்றால் பிரச்சனை அத்துடன் முடிந்து விடும். “சாப்பாடு மகா மட்டம்” என்று கணவன் சொன்னால் “எனக்கு தெரிந்தது இவ்வளவுதான், வேணும்னா நீங்க அம்மா வீட்ல போய் சாப்பிடுங்க” என்று சொல்லக் கூடாது. இன்றைக்கு ஏதோ இப்படி நடந்து போச்சு, நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்” என்று சொல்ல வேண்டும். எதையும் அடித்துப் பேசவோ, தாக்கிச் சொல்லவோ கூடாது. இதமாகவும் பதமாகவும் கூறவேண்டும்.

பெரும்பாலான நேரங்களில் பிரச்சனை களுக்கு காரணமாக அமைவது நிகழ்வுகளை அணுகும் விதம்தான். நிகழ்ச்சி ஒன்று, ஆனால் பார்க்கும் பார்வை வேறு. மாமன்னன் அக்பர் ஒரு கனவு கண்டார். தன்னுடைய ஒரு பல்லைத் தவிர அனைத்து பற்களும் விழுந்து விட்டது போல் கனவு. இந்த கனவுக்குப் பலன் என்ன என்று சோதிடர்களிடம் கேட்க,”அரசே! உங்கள் உறவினர்கள் எல்லோரும் உங்களுக்கு முன்னதாக இறந்து விடுவார்கள். நீங்கள் மட்டும் தனியாக விடப்படுவீர்கள்” என்று பொருள் கூறினார்கள். இந்த விளக்கம் மன்னருக்கு வருத்தத்தை அளித்தது. அப்போது அரசவைக்குள் நுழைந்த பீர்பாலை நோக்கி கனவுக்கு பொருள் கேட்கிறார் அரசர். ‘மன்னர் பெருமானே! உங்கள் உறவினர்களைக் காட்டிலும் நீங்கள் மட்டும் எல்லாவிதமான இன்பங்களையும் பேறுகளையும் பெற்று நீடுழி வாழ்வீர்கள்” என்று விளக்கம் அளித்தார். மன்னன் மனமகிழ்ந்தார், பொன்னும் பொருளும் பரிசாக அளித்தார். உள்ளம் ஏற்றுக் கொள்ளும் வகையில் உரைத்தால்தான் மகிழ்ச்சி, எனவே நிறையாளுமை நிகழ்வில் இல்லை, பார்க்கும் பார்வையில் இருக்கிறது.

“நல்லோரைக் காண்பதுவும் நன்றே: நலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே: நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே: அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று”-ஔவைப் பாட்டியின் மூதுரைப் பாடல் இது. நல்லதைக் காண்பது, கேட்பது, உரைப்பது, நல்லவர்களோடு சேர்ந்து இருப்பது-இப்படி நல்ல சூழலில் ஒருவர் இருந்தால் அவர் எப்போதும், எதிலும், எங்கும், யாரிடமும் நல்லதையே கண்பார். அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தைகளே வரும். அவர் எண்ணமும் செயலும் எந்த நிலையிலும் நல்லனவாகவே இருக்கும்.

மகாபாரத்தில் ஓர் இடம். பிறவிக் குருட னான திருதராஷ்டிரன் தனது புத்திரர்களாக தருமனையும் துரியோதனனையும் அனுப்பி உலகமும். மனிதர்களும் எவவிதம் இருக் கிறார்கள் என்று அறிந்து வரச் சொன்னார். தருமன் உலகையும் மனிதரையும் பார்த்து விட்டு “மக்கள் மிக நல்லவர்களாக வாழ்கிறார்கள்” என்று கூறினான். ஆனால் துரியோதனன் வந்தது “உலக மக்கள் மிகவும் கெட்டவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினான்.

நம்மிடையேயும் துரியோதனர்களும் தருமன் களும் இருக்கிறார்கள். துரியோதனர்கள் எப்போதும் எதிர்மறையாகவே உலகைப் பார்ப் பவர்கள். தருமன் போன்றோர் உடன்பாட்டு நோக்கில் உலகைக் காண்பவர்கள். விடிந்ததும் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என்று துடிதுடிப்போடு இருப்பவர் களுக்கு அடுத்தவர்களின் குறைகளைப் பார்க்க எண்ணமும் இருக்காது, நேரமும் இருக்காது. ஆனால் வெறுமனே உட்கார்ந்து கொண்டு வெட்டியாய் இருப்பவர்களுக்கு அடுத்தவர் களின் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்வது முழுநேரப்பணி. இவர்களுக்கு அடுத்தவர்களின் நிறைகள் தெரியாது, குறைகள் மட்டுமே தெரியும். நிறைகளை பாராட்டுவது இவர்கள் நோக்கமல்ல. குறைகளை விமர்சிப்பதுதான் ஒரே நோக்கம்.

இயற்கையின் படைப்புகள் அனைத்துமே ஒன்று என்று கருதப்பட்டாலும், ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் வேறுபட்டது. உலகில் உள்ள 600 கோடி மக்களும் ‘மனிதர்கள்’ என்றஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் உருவத்தாலும், உள்ளத்தாலும் தனித் தனியான வர்கள். ஒருவரைப் போல மற்றொருவர் தோன்றலாம், ஆனால் உண்மையில் இருவரும் வெவ்வேறு மனிதர்கள்.

கண்ணால் காணுகின்ற உருவத்தில், தோற்றத்தில் மட்டுமின்றி கண்ணுக்குப் புலனாகாத குணத்தில், எண்ணத்தில், உணர்வில், செயல்படும் திறத்தில், சிந்தனையில், அறிவில், அனுபவத்தில், வயதில், பழக்கவழக்கத்தில், விருப்பு வெறுப்பில் இன்னும் பல்வேறு நுட்பமான தன்மைகளில் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபாடு கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

எனினும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருத்துக்கு இணங்க நம் அகத்தின் எண்ணங்களும், சிந்தனைகளும் நம்மையும், நாட்டையும் வளப்படுத்தும் நல்வித்தாக அமைய வேண்டும். காலவெள்ளத்தில் கரைந்து போகும் புறஅழகைக் காட்டிலும் காலத்தை வென்று நிற்கும் அகத்தின் அழகுக்கு அழகு சேர்ப்போம்.

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க...

 

காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம்.

ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை. மேலும் நிபுணர்கள் கூட இந்த ஜூஸ்களை குடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

எனவே இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் காய்ச்சல் வருவதற்குள், அவைகளை சரிசெய்ய கீழ்க்கூறிய ஜூஸ்களை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு: இந்த ஜூஸ்களை குடிக்கும் போது, அதில் குளிர்ச்சியான தண்ணீரோ, பாலோ அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்க்கக் கூடாது.

எலுமிச்சை ஜூஸ்


 எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிவதோடு, புண்ணும் குணமாகும்.

இஞ்சி ஜூஸ்


 இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதால், இது எந்த வகையான கிருமியானாலும் எளிதில் அழித்துவிடும். எனவே தொண்டை கரகரவென இருக்கும் போதே, சிறிது இஞ்சி ஜூஸ் குடித்துவிடுங்கள்.

கேரட் ஜூஸ்

 கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தொண்டையில் எவ்வித தொற்றுகள் இருந்தாலும் குணப்படுத்திவிடும். அதலும் இதனை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், தொண்டைப் புண்ணின் தொல்லையில் இருந்து குணமாகலாம்.

பூண்டு ஜூஸ்

 இஞ்சியைப் போன்றே பூண்டிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே தொண்டைப் புண் இருக்கும் போது 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பூண்டு ஜூஸ் குடித்தால், உடனே குணமாகிவிடும்.

குருதிநெல்லி ஜூஸ் (Cranberry Juice)

தொண்டைப் புண்ணை சரிசெய்யும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் குருதிநெல்லி. ஆகவே தொண்டைப் புண் இருக்கும் போது குருதிநெல்லியை ஜூஸ் போட்டு குடியுங்கள்.

ஆரஞ்சு ஜூஸ்
 ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண் மற்றும் வலி குணமாகும்.

கற்றாழை ஜூஸ்


 கற்றாழை ஒரு சிறப்பான மூலிகைப் பொருள். இந்த கற்றாழையை சாறு எடுத்து, அதில் சிறிது கிராம்பு பொடி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.

தக்காளி ஜூஸ்

 தினமும் இரண்டு முறை தக்காளி ஜூஸில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

புதினா ஜூஸ்
 இஞ்சி, பூண்டு போன்றே புதினாவிலும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் உள்ளது. அதற்கு இதனை சாறு எடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து குடிக்க வேண்டும்.

அன்னாசிப் பழ ஜூஸ்

 அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் நொதி உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் இருப்பதால், இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும்.

கிவி ஜூஸ்


 கிவி பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் கூட தொண்டைப் புண்ணுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது வறட்சி இருமலில் இருந்து பாதுகாக்கும்.

வாழைப்பழ ஜூஸ்


 வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணை சரிசெய்யலாம். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விலகி இருக்கலாம்.

தர்பூசணி ஜூஸ்


 தர்பூசணியை வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணினால் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆப்ரிக்காட் ஜூஸ்


 தொண்டைப் புண்ணினால் அவஸ்தைப்படும் போது, ஆப்ரிக்காட் ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.

மிளகு கசாயம்

 மிளகை வாணலியில் போட்டு நன்கு வறுத்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அந்த நீரை சூடாக குடித்தால், தொண்டையில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, தொண்டைப் புண் உடனே குணமாகும்.

வெந்நீரில் இத்தனை நன்மைகள் இருப்பது தெரியுமா..?


எளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் ‘வெந்நீர்’.தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம்.

 * காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

 * ஏதாவது எண்ணைப் பலகாரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பின்னர் நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் மறைந்துவிடும்.

 * தொடர்ந்து வெந்நீர் குடித்தால் உடம்பில் சேரும் கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது.

 * மூக்கடைப்பால் அவதிப்படுகிறீர்களா? வெந்நீரைப் போன்ற சிறந்த மருத்துவர் ஏது? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு ‘ஆவி பிடித்தால்’ மூக்கடைப்பு, தலைப்பாரம் அகன்றுவிடும்.

 * உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத் தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால், பித்தத்தினால் ஏற்படும் வாய்க்கசப்பு மறைந்துவிடும்.

 * மேலும் உடல் வலிக்கும்போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

 * அலைந்து திரிந்ததால் பாதங்கள் வலியெடுக்கிறதா? அப்போதும் வெந்நீர் தான் கை கொடுக்கும். பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி, அதில் சிறிது கல் உப்பைப் போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போலத் தோன்றினால் வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால் கால் வலி மறைவதோடு பாதமும் சுத்தமாகி விடும்.

 * வீட்டில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும் இல்லத்தரசிகள் வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் கைகளை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருங்கள். அதனால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் அகன்று, கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

 * வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே ‘ஜில்’லென்று ஐஸ் வாட்டர் பருகுவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தலாம். அது நன்கு தாகம் தீர்க்கும்.

 * ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக வெந்நீர் பருகுவது நல்லது. அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால் அது அந்த நேரத்தில் இதமாக இருப்பதோடு, விரைவாக இயல்பு நிலை ஏற்படும்.

இப்படி வெந்நீரின் நன்மைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். வெந்நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது என்றும் நன்மை தரும்.

அதேநேரம் வெந்நீரில் தினமும் குளிப்பது உடலுக்கு உகந்ததல்ல. அது எலும்புகளை பலவீனப்படுத்தலாம்.

ஆண்களின் காதல்..கவிதை .!!!

ஆண்களின் காதல்...!!!

ரதியே வந்தாலும் அவள் மட்டுமே ரதி...!

அழகு தேவை இல்லை அன்பாய் இருந்தால் போதும்...!

அவள் சிரிக்க குழந்தையாய் மாறுவான்...!

அவள் அழுதால் தந்தையாய் மாறுவான்...!

சின்ன பரிசுகளில் சிலிர்க்க வைப்பான்...!

கட்டி அணைக்கும் பொழுது காமம் இருக்காது...!

முத்தம் இடும் பொழுது பொய்மை இருக்காது... !

எட்டி விலகும் பொழுது கண்கள் குளமாகும்... !

விரும்பி வரும் பொழுது தேகம் புதிதாகும்..!

உலகம் முழுவதும் அவள் தான்...!

அவள் வருகைக்கு காத்திருக்கும் பொழுது கால்கள் வலிக்காது...!

அவள் நேரம் தாழ்த்தி வந்தால் கோபம் இருக்காது...!

அவளுக்கு ஒன்றென்றால் உயிர்கள் தங்காது...!

காதலிக்கும் வரை காதலி...!

காதல் கல்யாணம் ஆகும் பொழுது இன்னொரு அம்மா...!

வயதுகள் தளரும் பொழுது காதல் தளர்வதில்லை...!

அவள் போதும்...! அவள் மட்டும் போதும்...!

வேறேதும் இல்லை அவளை விட பெரிய உலகம்...!

கிரைண்டர் பராமரிப்பு முறைகள்!


• தானியங்கள் எதுவும் போடாமலோ, சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.

• கிரைண்டர் வாங்கும் போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.

• கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைத்தால் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும்.

• முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு
 கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும்.

• கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடும்.

• குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயமுள்ளது. ஆகையால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்க வேண்டும்.

• கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது.

• கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.

• கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்கும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும்.

• மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.

• கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

குடல் புற்றுநோயை உண்டாக்கும் பிராய்லர் கோழிகள்!


 பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.

ரசாயணங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் பெரிய அளவில் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.

உழைத்தால் சாதிக்கலாம்!

 

 * நியாயத்தை எடுத்துச் சொல்வதில் கோழையாக இராதீர்கள். உலக நன்மைக்காக சண்டை செய்வதில் வீரராக இருங்கள்.

* உங்களை ஏழை என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு சக்தியல்ல. நன்மையும் தெய்வபக்தியுமே சக்தி.

* இந்த உலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

* தனியாக இருந்து கொண்டு பலருடைய பகையை தேடிக் கொள்பவன் அறிவற்ற மூடனைப் போன்றவன்.

* செல்வம் பெருகிய காலத்தில் ஒருவனுக்கு பணிவு வேண்டும். அதே சமயம், செல்வம் குறைந்து வறுமை வரும் காலத்தில் பணியாத துணிவு வேண்டும்.

* கடின உழைப்பு இல்லாமல், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது.

- விவேகானந்தர்

கீழா நெல்லி சூப் - சமையல்!



 என்னென்ன தேவை?

கீழாநெல்லி - 1 கட்டு (தண்டோடு),

தக்காளி - 2,

சின்ன வெங்காயம் - 5,

பூண்டு - 6 பல்,

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப,

சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,

இஞ்சி - ஒரு துண்டு,

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?


கீழாநெல்லிக் கீரையை தண்டோடு நன்கு அலசி, நன்கு இடித்து, அதோடு பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு இடிக்கவும். அதோடு சின்ன வெங்காயத்தை நசுக்கிச் சேர்த்து, மிளகுத் தூள், சீரகத் தூள், உப்புப் போட்டு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி, நான்கு, ஐந்து விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும்.

பிறகு அதை எடுத்து நன்கு மசித்து, வடிகட்டி அதன் சாற்றைக் குடிக்கவும். தொட்டாலே கையோடு வரும் முடி உதிர்வுப் பிரச்னைக்கு இது மருந்து. உடலும் குளிர்ச்சி அடையும்.

தெரிந்துகொள்ளுங்கள் - 2

மொழி வரலாற்றில் ஒரு சில அறிஞர்கள் உருவாக்கும் சொற்களே நிலை பெற்றுவிடுகின்றன. இமகபமதஉ என்ற ஆங்கிலச்சொல் "கலாசாரம்' என்று மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால் ரசிகமணி டி.கே.சி. அவர்கள் அது வடமொழி சாயலாக உள்ளதென்று அதைப் "பண்பாடு' என்று மொழி பெயர்த்தார். அதேபோல் "பார்லிமெண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் "பாராளுமன்றம்' என்ற சொல்லை பரிதிமாற் கலைஞர் மொழி பெயர்த்தார்.

நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைப்பது இயலாத காரியம். இன்றைய அறிவியல் உலகம் இதை சாதித்துக் காட்டியுள்ளது. ஆனால் கி.மு. 2 ஆயிரத்திலேயே பாபிலோனில் உள்ள யூப்ரட்டீஸ் நதியின் கீழ் 3,000 அடிக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்தது வியப்பூட்டும் செய்தியாகும்.

மிளகாய் என்பது மேலை நாட்டுத் தாவரம். இது வருவதற்கு முன்னால் மிளகைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். மிளகைப் போன்றே காரம் இருந்ததால் தமிழர்கள், அதனை "மிளகுக்காய்' என்றழைத்தார்கள். இதுவே, பின்னாளில் மிளகாய் என்று மாறியது.

பாம்புகளில் நாகப்பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை. வடக்கே கோதுமை நிறமுடைய ஒரு வகை நாகங்கள் உண்டு. இவற்றை யாராவது பிடிக்கவோ, கொல்லவோ நினைத்தால் முடிந்தவரை சீறிப்பார்க்கும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும். முடியாத பட்சத்தில் கற்களிலோ, பாறைகளிலோ மோதிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும்.

*  பிஜித் தீவில் உள்ள மக்கள் யாருக்காவது மரியாதை செய்ய விரும்பினாலோ, பாராட்ட நினைத்தாலோ அவர்களுக்கு திமிங்கலத்தின் பல்லை அன்பளிப்பாக அளிப்பார்கள்.

*  முகத்திற்கு வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்வது என்பது தொன்று தொட்டு வந்த நாகரீகமாகும். 3,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் முகத்திற்கு "ஸ்நோ' வைத்திருக்கின்றனர். துட்டகாமன் என்ற எகிப்திய மன்னனின் கல்லறையில் (பிரமிட்) இம்மாதிரியான முகப்பூச்சு உள்ள பாத்திரங்கள் காணப்படுகின்றன. இன்றும் அவை அபரிமிதமான மணத்துடன் இருப்பதுதான் வியப்பு. 

*  மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய சிகரம் மான்ட் பிளாங்க். பிரான்ஸ், இத்தாலி நாட்டில் அமைந்துள்ள இந்த சிகரத்தின் உயரம் 4,810 மீட்டர் ஆகும்.

*  புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கி.பி.1640-ல் கட்டத் தொடங்கி 1653-ல் கட்டி முடித்தனர். 

*  சென்னையில் 1,687-ம் ஆண்டில் நகராண்மைக்கழகம் தோன்றியது. இந்தியாவின் முதல் நகராண்மைக்கழகமும் இதுவே.

*   1786-ல் முதல் தபால்நிலையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

*  சென்னை பல்கலைக்கழகம் 1857-ல் தொடங்கப்பட்டது. 

*   முதன்முதலில் சென்னைக்கு மின்சார விளக்குகள் 1914-ம் ஆண்டு போடப்பட்டது. 

*   1924ம் ஆண்டிலேயே 8,300 மின்சார விளக்குகள் சென்னை நகரெங்கும் ஒளிவீசியது.

*  புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கி.பி.1640-ல் கட்டத் தொடங்கி 1653-ல் கட்டி முடித்தனர். 

*  சென்னையில் 1,687-ம் ஆண்டில் நகராண்மைக்கழகம் தோன்றியது. இந்தியாவின் முதல் நகராண்மைக்கழகமும் இதுவே.

*   1786-ல் முதல் தபால்நிலையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

*  சென்னை பல்கலைக்கழகம் 1857-ல் தொடங்கப்பட்டது. 

*   முதன்முதலில் சென்னைக்கு மின்சார விளக்குகள் 1914-ம் ஆண்டு போடப்பட்டது. 

*   1924ம் ஆண்டிலேயே 8,300 மின்சார விளக்குகள் சென்னை நகரெங்கும் ஒளிவீசியது.

<> உலகிலேயே சந்தடி நிறைந்த நகரம் எகிப்தின் தலைநகரான கெய்ரோதான்.<> கொரியாவில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் கப்பல் வடிவத்தில் அமைந்துள்ளது.

<> ஆசியா என்ற சொல்லின் சரியான பொருள் சூரியோதய பூமி என்பதாகும்.

<> அமெரிக்கர்கள் மாதத்தை முதலாகவும் தேதியை இரண்டாவதாகவும் எழுதுவது வழக்கம்.

<> விண்வெளியில் ஒரு மனிதன் பறக்க 15 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது என்று கணக்கிட்டுள்ளனர்.

<> சிங்கப்பூரின் பழைய பெயர் டெமாசத் என்பது. டெமாசத் என்றால் கடல் நகரம் என்று பொருள்.

<> கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் உப்பை "உப்பு' என்றே அழைக்கின்றனர்.

<> வைரத்தைக் குறிப்பிடும் "டயமண்ட்' என்ற ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதற்கு வெல்லப்பட முடியாத பொருள் என்று பெயர்.

<> அமெரிக்காவில் ரோம் என்ற பெயரில் 8 நகரங்கள் உள்ளன.

<> உலகத்தில் அதிக குற்றங்கள் நடைபெறும் நாடு பிரிட்டன்தான். அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில், தென்அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

* நமது குடலை நேரடியாக எக்ஸ்-ரே எடுக்க முடியாது.

* அமெரிக்க அதிபரை யாரும் கைது செய்ய முடியாது. அவர், "வீட்டோ பவர்' என்னும் அதிகாரம் பெற்றவர்.

* ஆர்டிக் பெருங்கடலில் கப்பல்கள் செல்ல முடியாது.

* பூஜ்ஜியத்தை ரோமன் மொழியில் எழுதமுடியாது. அதற்கு நிகரான பதம் கிடையாது.   
 
* மைசூர் 'தீப நகரம்' என்று அழைக்கப்படுகிறது.

* "இளஞ்சிவப்பு நகரம்' என அழைக்கப்படுவது ஜெய்ப்பூர்.

* "காற்று நகரம்' என்று சிகாகோ அழைக்கப்படுகிறது.

* "வெள்ளை நகரம்' என அழைக்கப்படுவது பெல்கிரேடு.

* "பூங்கா நகரம்' என்று அழைக்கப்படுவது பெங்களூரு.

* குதிக்க முடியாத ஒரே விலங்கு யானை.

* நாம் பிறந்தது முதல் கண்கள் மட்டும்தான் வளராமல் அப்படியே இருக்கும்.

* ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண்கள் கண்களை இமைக்கின்றனர்.

* மனிதர்களை விட வேகமாக ஓட கூடியது நீர்யானை.

* ஒரு எறும்பு தன் உடலின் எடையை போல 50 மடங்கு எடையை தூக்கி செல்லும். 30 மடங்கு எடையை இழுத்து செல்லும். மயங்கி விழும்போது எப்போதும் வலது பக்கமாகவே சாய்ந்து விழும்.

•பூனைக்குத் தண்ணீரைக் கண்டால் ஆகாது. அதன் மீது சிறிதளவு தண்ணீர் தெளித்தாலும் அது தலைதெறிக்க ஓடிவிடும்.

•கோலாக் கரடிகள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை யூகலிப்டஸ் இலைகளைச் சாப்பிடும் பொழுதே பெறுகின்றன. அதனால் இவை தண்ணீர் என்று தனியாக எதையும் குடிப்பதில்லை.

•மயில் இறகுகளைச் சுவர்களில் ஒட்டி வைத்தால் பல்லிகளின் தொல்லை இராது.

•மாமிசம் உண்ணும் விலங்குகள் அவை உண்ணும் பிராணிகளின் இறைச்சியிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் உப்புச் சத்தைப் பெறுகின்றன.

•ஒட்டகத்துக்குப் பார்க்கும் சக்தி அதிகம். ஒரு மைலுக்கு அப்பால் தண்ணீர் தேங்கியிருந்தாலும்கூட ஒட்டகம் எளிதில் கண்டுபிடித்து விடும்.

•வானில் குறிப்பிட்ட உயரத்துக்கும் மேல் ஜெட் போன்ற விமானங்கள் விட்டுச் செல்லும் புகை போன்ற வெள்ளைக் கோடுகள் அதன் புகையல்ல, நீர்த்திவலைகள்.

•முதல் உலகப் போரில் ராணுவ வீரர்கள் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து பாட்டிலில் போட்டு அதன் வெளிச்சத்தைப் படிக்க, எழுத பயன்படுத்தினர்.

•முதன்முதலாக பூமியின் சுற்றளவைக் கண்டறிந்தவர் ராத்தோஸ்தனிஸ் என்பவர்.

•ஆசியாவின் முதல் விளையாட்டுக்கான பல்கலைக்கழகம் புனே நகரில் உருவாக்கப்பட்டது.

•இந்தியாவின் தேசிய விலங்காக புலியை 1972-ஆம் ஆண்டு அறிவித்தார்கள்.

•இந்தியாவில் (ஆங்கிலேயர்களின்) கிழக்கு இந்தியக் கம்பெனி துவங்கிய ஆண்டு 1600 ஆகும்.

•ஐ.நா.பல்கலைக்கழகம் டோக்கியோ நகரில் உள்ளது.  

கூகுள் பற்றி நீங்கள் அறியாதவை..

இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக்கொள்ளுவது கூகுள் பற்றி தான்.கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் கூகுள்.

இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.


1. கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub).

2. கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.

3. கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் இன்டெல் நிறுவன மேனேஜர் வீட்டில் இருந்த கார் ஷெட்டில் இயங்கியது.

4. ஓர் இணைய தளத்தின் தரத்தினை அளக்க பேஜ் ரேங்க் (Page Rank)என்ற அலகினை கூகுள் பயன்படுத்துகிறது.

5. ஜிமெயிலை உருவாக்கிய கூகுள் பொறியாளர் பால் புக்ஹெய்ட் (Paul Buchheit). இவர் தான் கூகுள் நிறுவனத்தின் புகழ் பெற்ற "Don't be evil" என்ற வாசகத்தைக் கொண்டு வந்தவர்.

6. கிராண்ட் சென்ட்ரல் (GrandCentral) என்ற நிறுவனத்தினைக் கையகப்படுத்தி, கூகுள், கூகுள் வாய்ஸ் (Google Voice) என்ற சேவையைக் கொண்டு வந்தது.

7. கூகுள் நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் Google I/O என அழைக்கப்படுகிறது.

8. இந்த ஆண்டு Google I/O கூட்டத்தின் போது, இதன் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின், ஸ்கை டைவிங் செய்து, உலகத்தில் உள்ள பத்திரிக்கைகளில் செய்தியாக இடம் பெற்றார்.

தொண்டைச் சளிக்கு ஓமம்!


ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் சுமார் 2 - 2 1/2 மணி நேரத்திற்கு மூக்கிலிருந்து நீராக வடிகிறது. தொண்டையில் கபம் கட்டிக் கொள்கிறது. சீரணமும் தாமதமாகிறது. தும்மலுடன் கபம் வெளியேறுகிறது. இது எதனால்? இது மாற என்ன சாப்பிடலாம்?

சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கிராம்பு, ஏலக்காய் விதை இந்த ஐந்தையும், ஒரு தளிர் வெற்றிலையின் நடுநரம்பும், கீழ்ப்பகுதியையும் நீக்கிவிட்டு, அதில் சுருட்டி, ஒவ்வொரு சாப்பாட்டுக்குப் பிறகும் வாயில் அடக்கி நன்றாக மென்று சாப்பிடவும்.

சாப்பாட்டுக்குப் பிறகு, கபம் உற்பத்தியாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழகொழப்பு, நிலைத்ததன்மை போன்ற குணங்கள் நிறைந்த கபம் எனும் தோஷமானது, உணவிற்குப் பிறகு உங்களுக்குக் கூடுவதால், மூக்கிலிருந்து நீராகவும், தொண்டைக் கபம், தும்மல் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. மேற்குறிப்பிட்ட ஐந்தும், வெற்றிலையுடன் சேர, இந்தக் குணங்களுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு, கபத்தைக் குறைக்கின்றன.

மேலும் இவை அனைத்தும் பசியைத் தூண்டிவிடுவதால் உங்களுடைய செரிமானத்தின் தாமதம் விரைவில் குணமாகிவிடும். இவை மூலம் உட்கொண்ட உணவு செரித்துவிடுவதால் அகம் மலர்கிறது. செரிப்பைத் துண்டுவதாலேயே சீரகத்திற்கு, சீர்அகம் என்று பெயர். சாப்பாட்டுக்குப் பிறகு சீரகம் சாப்பிட்டால் வெகுட்டல், உமட்டல், வயிற்று உப்புசம், உளைச்சல், வயிற்று கனம் முதலிய ஜீரண உபாதைகள் நீங்கும்.

உண்ட களைப்பு நீங்க, வாயில் நீரூற்று நிற்க 5, 6 சோம்பு விதைகளை மென்று சாப்பிடுவது வழக்கம். வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நுரைத்த கபத்துடன் காணும் இருமல் முதலியவற்றில் இது நன்கு உதவும். வாசனையுடன் கூடிய கார்ப்பும் இனிப்பும் உள்ள விதை.

ஓமம் கபத்தைப் பிரித்து நாட்பட்ட இருமல், மூச்சிரைப்பு, கபம் வெளிவருவதற்காகக் கடுமையாக இருமுவது, இருமி இருமிக் கடைசியில் மிகக் கஷ்டப்பட்டுச் சிறிது கபம் வெளியாவது போன்ற கஷ்டங்களை நீக்கிவிடும். ருசியின்மை, பசி மந்தம், ஜீரண சக்திக் குறைவு, வயிற்று உப்புசம், வயிறு இறுகி கட்டிக் கொள்ளுதல், வயிற்று வலி, கிருமியால் வேதனை போன்றவற்றிற்கு ஓமமும் உப்பும் சேர்த்த சூரணத்தைச் சாப்பிடும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் கிராமங்களில் பழக்கத்திலுள்ளது.

பாவபிராகர் எனும் முனிவர் கிராம்பைப் பற்றி வெகுவாகப் புகழ்கிறார். காரமும் சிறிது கசப்பும் நிறைந்த அது, எளிதில் செரிப்பது. கண்களுக்கு நல்லது, குளிர்ச்சியானதாக இருந்தாலும் ருசி, பசியைத் தூண்டிவிட்டு கப பித்த ரத்த உபாதைகளை அகற்றக் கூடியது; மூச்சிரைப்பு, இருமல், விக்கல், க்ஷயரோகங்களை நீக்கக் கூடியது என்று தெரிவிக்கிறார். தன்வந்தரி நிகண்டுவில் இதயத்திற்கு நல்லதும், பித்தத்தைக் குறைப்பதும், விஷத்தை முறிக்கக்கூடியதும், விந்துவை வளர்ப்பதும், மங்களகரமானதும், தலையைச் சார்ந்த உபாதைகளை நீக்கக் கூடியது என்றும் கிராம்புவைப் பற்றி மேலும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஏலக்காய் ருசி, பசி, ஜீரணச் சக்தி தரும். உடற்சூட்டைப் பாதுகாக்கும். வாயில் நீர் ஊறுதல், நாவறட்சி, வியர்வையுடன் கூடிய தலைவலி, வயிற்றில் கொதிப்பு, மலத்தடை, காற்றுத்தடை, வாந்தி, உமட்டல், சிறுநீர்ச் சுருக்கு, உஷ்ணபேதி, நெஞ்சில் கபக்கட்டு உள்ள போது ஏலத்தின் விதையைச் சுவைக்கலாம்.

வெற்றிலை, உணவிற்குப் பின் வாயின் சுத்தத்திற்கும் ஜீரணத்திற்கும் உதவும், உமிழ்நீர் சுரப்பைக் கட்டுப்படுத்தும். காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிப் பின் உபயோகிப்பர்.

அதனால் இவற்றை உபயோகித்து நீங்கள் விரைவில் கபத்தின் உபாதையிலிருந்தும், மந்தமான பசியிலிருந்தும் விடுபடலாம்.

தெரிந்துகொள்ளுங்கள் - 1

* இரண்டாம் உலகப் போர் ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.

*  ஆறு கி.மீ. வேகத்தில் வீசும் காற்றுக்குப் பெயர்தான் தென்றல்.

*  கரடியின் கர்ப்பகாலம் ஆறு மாதங்கள்.

*  வைரத்துக்கு ஆறு பட்டைகள் தீட்டப்படுகின்றன.

*  நீரைவிட ஆறு மடங்கு அடர்த்தி உள்ளது இரத்தம்.

*  கழுகால் ஆறு கி.மீ. தூரம் வரை சிறகுகளை அசைக்காமல் பறக்க முடியும்.
 
*   தமிழ்நாட்டில் முதன்முதலில் பெண்கள் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

*  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சொந்த ஊர் உத்தமதானபுரம் (தஞ்சை மாவட்டம்).

*  தமிழ்நாட்டில் பத்திரிகை காகித நிறுவனம் உள்ள ஊர் } காகிதபுரம், திருச்சி மாவட்டம்.

*  சென்னை மாவட்டத்தில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் சி.வி.தாமோதரம் பிள்ளை என்பவர்.

*  டில்லியை ஆண்ட கடைசி மன்னன் பிருதிவிராஜ் சவுஹான்.

*  ஆங்கிலத்தில் பல நாடகக் காவியங்களைப் படைத்த ஷேக்ஸ்பியருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

*  இங்கிலாந்து அரசியின் காருக்கு நம்பர் பிளேட் கிடையாது.

*  ஒட்டகம் பத்து நிமிடத்தில் 100 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

*  உலகிலேயே சினிமா தியேட்டர்கள் இல்லாத நாடு சௌதி அரேபியா.

* உலகிலேயே அதிகமான மக்களால் பேசப்படும் மொழி சீனம். சீனாவின் மக்கள் தொகையே இதற்குக் காரணம் என்றாலும் ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள பல நாடுகளிலும் சீன மொழி பேசும் மக்கள் பரவியிருக்கிறார்கள்.

* இருமொழி தட்டச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் வாதம்ஷோல்ஸ் என்ற அமெரிக்கர் ஆவார். 1867-ம் ஆண்டு இது அறிமுகம் செய்யப்பட்டது.

*   சுறா மீனின் தோலையே உப்புத் தாளாகப் பயன்படுத்தும் தச்சர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ளனர்.

*  ஆப்பிரிக்க நாட்டு எருமைகள் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

*  வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டைகளை இடும்.

*  மீனின் இதயத்தில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும்.

*  பறவைகள் சில நேரங்களில் முறிந்த தமது சிறகுகளைத் தாமாகவே சரி செய்து கொள்ளும் திறன் உடையவை.

*  உலகிலேயே உப்புச் சுவை குறைவாக உள்ள கடல் பால்டிக் கடல்தான்.

*  சுறா மீனின் கண்கள் இருட்டில்கூட பளிச்சென்றே இருக்குமாம்.

*  திமிங்கிலம் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. தன் குட்டிகளுக்கு தாய் திமிங்கிலம் நேரடியாகப் பால் ஊட்டுவதில்லை. கடல் நீரிலேயே பாலைச் சுரந்துவிடும். குட்டிகள் நீரிலிருந்து தாய்ப் பாலை மட்டும் பிரித்து அருந்திப் பசியாறுமாம்.

சுறா மீனின் தோலையே உப்புத் தாளாகப் பயன்படுத்தும் தச்சர்கள் இங்கிலாந்து நாட்டில் உள்ளனர்.

* ஆப்பிரிக்க நாட்டு எருமைகள் மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

* வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டைகளை இடும்.

* மீனின் இதயத்தில் இரண்டு அறைகள் மட்டுமே இருக்கும்.

* பறவைகள் சில நேரங்களில் முறிந்த தமது சிறகுகளைத் தாமாகவே சரி செய்து கொள்ளும் திறன் உடையவை.

* உலகிலேயே உப்புச் சுவை குறைவாக உள்ள கடல் பால்டிக் கடல்தான்.

வந்தே விட்டது நமக்கான பேட்டரி ஹெலிக்காப்டர் ! வீடியோ!




வோலோகாப்டர் விசி 200……. கடைசியில் வந்தே விட்டது பேட்டரி ஹெலிக்காப்டர் – குழந்தைங்க விளையாடறது இல்லை உண்மையிலே இரண்டு பேர் போற ஹெலிக்காப்டர். சுத்தமா சத்தமே கேட்காது – புகை மாசு கிடையாது. செங்குத்தாக மேலே எழும்பும் கீழே இறங்கும். இதை வீடியோ கேம் ஜாய் ஸ்டிக் மாதிரி வச்சி ஆப்பரேட் பண்ணினா ஓகே

இபபோதைக்கு 1 மணி நேர சிங்கிள் சார்ஜ்ல போறது போல பண்ணியிருக்காங்க. அடுத்து 6 மணி நேரம் வரை பறக்க வைக்க ரெடி பண்றாங்க.

இதில் அதிக செலவு வைக்கும் பொருட்களும் இல்லை – அதே சமயம் லைட் கார்பன் பாடியில செஞ்ச இது அனேகமா 5 லட்சத்துக்குள்ளத்தான் ஆகும்னு நல்ல தெரிஞ்சவங்க சொல்றாங்க என்ன ஹாட்டு மேட்டர் தானே….. இந்த வீடியோக்களை  பாருங்க…..

பெண்கள் வாயாடிகள் ஆவது நல்லது!

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

நலமா எனத் தொடங்கும் உரையாடல் குழந்தைகள், வீடு, வேலை, மாமியார், நண்பர்கள் என கிளை விட்டுப் பரந்து விரிந்து பொழுது போவதை அறியாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்களின் உரையாடல் பெரும்பாலும் வறட்டு உரையாடலாய் இருப்பதில்லை. சிரிப்பும், கேலியும், கிண்டலும், உற்சாகமும் என உலகத்தின் மிக முக்கியமான பணி உரையாடல் என்பது போல அவர்கள் அதில் ஒன்றி விடுவார்கள்.

ஆண்கள் பலருக்கும் இந்த கலை வாய்ப்பதில்லை. “நலமா ?” என ஆரம்பிக்கும் உரையாடல் “நல்லா இருக்கேன்” என்ற பதிலைக் கேட்டபின் எப்படித் தொடர்வது என தெரியாமல் நொண்டியடிக்கும்.

அதனால் எழுகின்ற பொறாமையோ என்னவோ “ இந்தப் பெண்களே இப்படித்தான், யாரையாவது பார்த்தால் போதும் மணிக்கணக்காய் பேச ஆரம்பித்து விடுவார்கள்” என ஆண்கள் அடிக்கடி அலுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி மனம் விட்டு உரையாடுவதும், நண்பர்களுடன் பேசி மகிழ்வதும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது எனும் புதிய ஆராய்ச்சி ஒன்றை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டு கதை பேசும் பெண்களின் மனதில் இன்னும் கொஞ்சம் இன்பத்துப் பால் வார்த்திருக்கிறார்கள்.

மனித உடலிலுள்ள புரோகெஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் மன அழுத்தத்தையும், கவலை, பதட்டம் போன்றவற்றையும் குறைக்கக்கூடிய தன்மை உடையது. மனம் விட்டுப் பேசி சிரித்து உரையாடும் பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் அதிக அளவில் இருப்பதாகவும், இதுவே பெண்களின் மன மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருவதாகவும் அவர்கள் மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

இத்தகைய உரையாடல்கள் வெறுமனே பொழுது போக்காக மட்டும் அமைந்து விடாமல் பெண்களுடைய நட்பு இறுக்கத்துக்கும், உதவும் மனப்பான்மைக்கும் கூட துணை செய்கிறதாம்.

ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் தொலைக்காட்சித் தொடர்களில் மாலை நேரம் முழுவதும் செலவிடும் பெண்களுக்கு உரையாடலுக்காய் செலவழிக்கும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்பது கண் கூடு. அத்தகைய சற்றும் பயன் தராத தொலைக்காட்சித் தொடர்களை விலக்கி விட்டு ஆரோக்கியமான உரையாடலுக்குப் பெண்கள் திரும்ப இந்த ஆராய்ச்சி அழைப்பு விடுக்கிறது.

அன்புக்கு நான் அடிமை - கவிதை!


அன்புக்கு அடிமையாகாத ஜீவன்கள்

 உலகில் எதுவுமே...இல்லை...!

மிருகத்தை மனிதன்

 மிருகமாக பார்க்கிறான்....

மனிதனை மிருகங்கள்...

பல நேரம்...

அன்பாகவே பார்க்கின்றது...!

எந்த உயிரினமும்...

தன்னிடம் அன்பு காட்டும் வரை..

அன்பையையே ..

அதுவும் வெளிப்படுத்துகிறது...!